.

யாழ்.தீவகக் கடற்பகுதியில் மற்றுமொரு ஆணின் சடலம் மீட்பு: இதுவரையில் ஏழு சடலங்கள் கரையொதுங்கின..!

யாழ்.தீவகக் கடற்கரையில் தொடர்ச்சியாக சடலங்கள் கரையெதுங்கிவரும் நிலையில் மற்றுமொரு ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலமான அழுகிய நிலையில் புங்குடுதீவுக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. 

இங்கு மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவருக்கு 35 முதல் 45 வரையான வயது இருக்கலாமென பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரையில் தீவகக் கடற்பகுதியில் 7 சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் எங்கிருந்து வந்தென்பது இதுவரையில் மர்மாகவே இருந்து வருகின்றது.

0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips