.

மண்கும்பான்,வேலணை,புங்குடுதீவில் அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்கள் அவுஸ்ரேலியா சென்றவர்களா?


இன்றைய தினம் வியாழன் மாலை தீவகம் மண்கும்பான் பகுதியில் அமைந்துள்ள-செட்டிகாட்டு நீர்வழங்கும் மையத்திலிருந்து நூறு மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தெற்கு கடற்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதே போல் வேலணை துறையூரை அண்மித்த கடற்கரைப்பகுதியிலும் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றய தினம் புங்குடுதீவு கடற்கரையிலும் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியதாக  தெரிவிக்கப்பட்டது.

கரையொதுங்கும் இச்சடலங்கள் கடந்தவாரம் அவஸ்ரேலியாவுக்கு சென்ற போது விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களுடையதாக இருக்கலாம் என்று  பொலிஸ்தரப்பால் நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips