யாழ் புங்குடுதீவுப் கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உருக்குலைந்த நிலையில் புங்குடுதீவு 10 வட்டார கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்த சடலத்தை கடற்படை மீட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்த சடலம் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment