வேலணை பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட மண்டைதீவு,அல்லைப்பிட்டி மற்றும் வேலணை பகுதிகளில் அமைந்துள்ள குளங்களை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவில் அமைந்துள்ள சம்புக்குளம் ஏற்கனவே புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து வேலணை செட்டிக்குளத்தில் அமைந்துள்ள வெட்டுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும்அதனைத் தொடர்ந்து அல்லைப்பிட்டி தாமரைக்குளம் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச தவிசாளரின் முயற்சியின் பலனாகவே இக்குளங்கள் புனரமைக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரிய தூர்வாரும் இயந்திரங்களின் உதவியுடன் இராணுவத்தினரே இப்பணிகளை மேற்கொண்டு வருவதாக அறியவிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேசசபைத் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள் நேரடியாகச் சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment