உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் லிதுவேனிய வீராங்கனை ரூடா மெயிலுடைட் உலக சாதனை படைத்துள்ளார்.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் 15வது உலக நீச்சில் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.
இதில் பெண்கள் 100 மீற்றர் பிரஸ்ட்ஸ்டோக் பிரிவில், 16 வயதான லிதுவேனியா வீராங்கனை ரூடா மெயிலுடைட் பங்கேற்றார்.
இதற்கு முன் இப்பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா ஹார்டி 1.04.45 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.
இதுகுறித்து ரூடா கூறுகையில், உலகசாதனை படைத்ததை தங்கப் பதக்கம் வென்றதை விட உயர்வாக கருதுகிறேன். நிச்சயம் இறுதிச்சுற்றில் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இவர் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment